அமெரிக்காவுக்கு நோய்க்கிருமி கடத்த முயன்று சிக்கிய 2 பேர்: எப்.பி.ஐ. விசாரணை

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆபத்தான உயிரியல் நோய்க் கிருமிகளை கடத்தியதாக சீன பெண் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
@1brஇதுபற்றிய விவரம் வருமாறு:
சீனாவைச் சேர்ந்தவர்கள் யுன்கிங் ஜியான் (33), ஜூன்யோங் லிபு(34). இவர்களில் ஜுன்யோங் லிபு, சீன பல்கலைக்கழகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அங்கு அவர் இந்த நோய்க்கிருமிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.
டெட்ராய்ட் மெட்ரோபாலிட்டன் விமான நிலையம் வழியாக அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைந்து மிச்சிகன் பல்கலை.யில் ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டுள்ளார். பிடிபட்ட அவர்கள் ஆபத்தான உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவுக்குள் கடத்திக் கொண்டு வந்ததாக கைது செய்யப்பட்டனர்.
பூஞ்சை வகையான இந்த நோய்க்கிருமி வேளாண்மை உயிரியல் ஆயுதமாக கருதப்படுகிறது. அதாவது, பார்லி, கோதுமை, சோளம், அரிசி போன்ற பயிர்களுக்கு ஹெட் பிளைட் என்ற நோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. பயிர்களை தவிர கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கும் தீங்கை உண்டாக்கும்.
பிடிபட்ட இருவர் மீதும் சதி, பொருட்களை கடத்துதல், பொய் தகவல்களை அளித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன. இது குறித்து எப்.பி.ஐ., இயக்குநர் காஷ் படேல் கூறி உள்ளதாவது;
அமெரிக்க நிறுவனங்களுக்குள் ஊடுருவி,உணவு விநியோகத்தை அச்சுறுத்தி உயிர்களுக்கும், பொருளாதாரத்துக்கும் கடும் தீங்கு விளைவிக்கவே இதுபோன்ற செயல்கள் அரங்கேறுகின்றன என்றார்.
வாசகர் கருத்து (6)
சண்முகம் - ,
05 ஜூன்,2025 - 07:19 Report Abuse

0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
04 ஜூன்,2025 - 19:42 Report Abuse

0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
04 ஜூன்,2025 - 16:41 Report Abuse

0
0
Reply
Sampath - Chennai,இந்தியா
04 ஜூன்,2025 - 14:40 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04 ஜூன்,2025 - 13:16 Report Abuse

0
0
மீனவ நண்பன் - Redmond,இந்தியா
04 ஜூன்,2025 - 14:11Report Abuse

0
0
Reply
மேலும்
-
முகூர்த்த நாளில் நெடுஞ்சாலைகளில் திக்குமுக்காடிய வாகனங்கள்
-
பகவத் கீதை சொற்பொழிவு திருப்பூரில் துவங்கியது
-
உயிர் வேலியாக 'தேக்கு' ; கூடுதல் வருவாய் வாய்ப்பு
-
தாமரைக்குளக் கரையில் பனை மர நாற்றுகள் நடவு
-
'அசையாத' துாண்டில் அதலபாதாளத்தில் சரிந்த தொகை; மீன் மார்க்கெட் ஏலத்தில் அதிர்ச்சி
-
காட்டன் மில்லில் பயங்கர தீவிபத்து
Advertisement
Advertisement