பகவத் கீதை சொற்பொழிவு திருப்பூரில் துவங்கியது

திருப்பூர்; திருப்பூரில், ஸ்வாமினி மஹாத்மாநந்த ஸரஸ்வதி நிகழ்த்தும் ஸ்ரீமத் பகவத் கீதை தொடர் ஞான யஜ்ஞம் நேற்று துவங்கியது; ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் தொடர் சொற்பொழிவு நடைபெறும்.
திருப்பூர், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், கலை பண்பாட்டு மையம் திருவருள் அரங்கில், ஸ்ரீ மத் பகவத் கீதை, தொடர் ஞான யஜ்ஞம் நேற்று துவங்கியது.ஸ்வாமினி மஹாத்மாநந்த ஸரஸ்வதி, சொற்பொழிவாற்றினார். நேற்று மாலை, 6:00 முதல், 7:00 மணி வரை நடந்த சொற்பொழிவில் பலரும் பங்கேற்றனர்.
முன்னதாக சாய் கிருஷ்ணா ஸ்கூல் ஆப் பைன் ஆர்ட்ஸ் மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. ஒவ்வொரு வாரமும் வியாழன் தோறும், இந்த தொடர் சொற்பொழிவு நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement