10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார் விஜய்!

சென்னை: 10, 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து, த.வெ.க., தலைவர் விஜய் விருது வழங்கி கவுரவித்தார்.
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, த.வெ.க., சார்பில் விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சட்டசபை தொகுதிவாரியாக மாணவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு விருது மற்றும் விருந்தளித்து, விஜய் வாழ்த்தி வருகிறார்.
முதற்கட்டமாக, 80 தொகுதிகளுக்கான மாணவர்களுக்கு, மே 30ம் தேதி, மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் கட்டமாக இன்று (ஜூன் 04) ராமநாதபுரம், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், தர்மபுரி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்துார், திருப்பூர், திருவாரூர், தென்காசி, மயிலாடுதுறை, விருதுநகர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீடு மற்றும் கட்சி அலுவலகம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இதனால், தன் பாதுகாப்பு கருதி, கட்சி நிகழ்ச்சிகளை எல்லாம் அங்கேயே அவர் நடத்தி வருகிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








மேலும்
-
புற்றுநோய் கண்டறியும் முகாம் எப்போது ?
-
தக்காளியை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் கனவு நனவாகுமா? வழிகாட்டுதல் இல்லாமல் தவிக்கும் விவசாயிகள்
-
உலக சுற்றுச்சூழல் தினம்; பசுமையை காக்க மரக்கன்று நடவு
-
கைவினை பொருட்கள் தயாரிக்க பயிற்சி; மலை கிராமத்தில் எதிர்பார்ப்பு
-
'இந்தியாவுக்கு வெளிநாட்டினரை பயன்படுத்தி தங்கம் கடத்துவது அதிகரித்து வருகிறது'
-
மாணவர்களை குறி வைக்கும் மோசடி கும்பல்: விழிப்புடன் இருக்க வல்லுனர்கள் எச்சரிக்கை