பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம்; தஞ்சையில் வி.ஏ.ஓ., உள்பட இருவர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டா வழங்குவதற்காக ரூ.5,000 லஞ்சம் வாங்கிய தோப்புவிடுதி வி.ஏ.ஓ., முருகேசன் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுகா பகுதியை சேர்ந்த அம்மங்குடி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன். இவரது நிலம் தோப்புவிடுதி கிராமத்தில் உள்ளது. கூட்டு பட்டாவில் உள்ள நிலத்திற்கு உட்பிரிவு செய்து தனிபட்டா பெற, தோப்புவிடுதி வி.ஏ.ஓ., வான புதுக்கோட்டை மாவட்டம் மட்டங்கால் பகுதியை சேர்ந்த முருகேசன்,32, என்பவரை அணுகியுள்ளார்.
அப்போது, முருகேசன் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், பணத்தை திருவோணம் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள இ - சேவை மையம் நடத்தி வரும் ஊர்காவல்படையில் பணியாற்றும் சுதா என்பவரிடம் கொடுத்து விட கூறியுள்ளார்.
இந்நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத குமரேசன், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின் படி, ரசாயனம் தடவிய பணத்தை பெற்றுக் கொண்டு நேற்று வேல்முருகன், சுதா நடத்தி வரும் இ- சேவை மையத்திற்கு சென்று, பணத்தை சுதாவிடம் கொடுத்தார். பிறகு, லஞ்ச பணத்தை வி.ஏ.ஓ.,முருகேசனிடம் சுதா வழங்கியுள்ளார்.
அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், வி.ஏ.ஓ., முருகேசனையும், சுதாவையும் கையும் களவுமாய் பிடித்தனர். பிறகு இருவரையும் திருவோணம் தாசில்தார் அலுவலகத்தில் வைத்து டி.எஸ்.பி., அன்பரசன், இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையிலான போலீசார் சுமார் 3 நேரம் விசாரணை நடத்தினர்.


மேலும்
-
மக்களே, உஷாரா இருங்க; நாடு முழுவதும் 5,364 பேருக்கு கொரோனா பாதிப்பு
-
பாகிஸ்தானில் ஏழ்மை நிலையில் 10 கோடி பேர்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு
-
டிரம்ப்- மஸ்க் மோதல் உச்சம்; டெஸ்லா நிறுவன பங்குகள் கடும் சரிவு
-
காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ., ரெய்டு; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
-
தருமபுரியில் மலையாள நடிகரின் கார் விபத்து; தந்தை பரிதாப பலி