இந்தியாவிடம் வீழ்ந்தது அயர்லாந்து * நட்பு ஹாக்கி போட்டியில்...

டப்ளின்: சர்வதேச நட்பு ஹாக்கி போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், புரோ லீக் தொடர் நடக்கிறது. 9 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து (16 புள்ளி), பெல்ஜியம் (16), இந்தியா (15) 'டாப்--3' இடத்தில் உள்ளன.
அடுத்து இந்திய அணி, நெதர்லாந்து மண்ணில் நெதர்லாந்து (ஜூன் 7, 9), அர்ஜென்டினா (ஜூன் 11, 12) அணிகளுடன் விளையாட உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் அயர்லாந்து சென்ற இந்திய அணி இரண்டு போட்டியில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி டப்ளினில் நடந்தது.
முதல் பாதி முடிவதற்கு சற்று முன் இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' கிடைத்தது. இதில் ஷிலானந்த் லக்ரா கோல் அடிக்க, இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதியில் தில்பிரீத் சிங் ஒரு கோல் அடிக்க, இந்தியா 2-0 என முந்தியது. இதற்கு அயர்லாந்து வீரர் லுாயிஸ் ரோவ், ஒரு 'பீல்டு' கோல் அடித்து பதிலடி தந்தார். போட்டியின் கடைசி நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பை அயர்லாந்து வீரர்கள் வீணடித்தனர். முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.
மேலும்
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்
-
ராஜ்யசபா தேர்தல்; முதல்வர் முன்னிலையில் கமல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
-
நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி பெருமிதம்
-
பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
மக்களே, உஷாரா இருங்க; நாடு முழுவதும் 5,364 பேருக்கு கொரோனா பாதிப்பு