பாக்.,கிற்கு உளவு பார்த்த மேலும் ஒரு யு டியூபர் கைது

சண்டிகர்: ஜம்மு - காஷ்மீரின், பஹல்காமில் பாக்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் பின்னணியில், அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, நம் ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்த ரகசிய தகவல்களை உளவு பார்த்து பாகிஸ்தானுக்கு தெரிவித்து வந்தவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். அந்த வரிசையில், 'டிராவல் வித் ஜோ' என்ற யு டியூபர் சேனலை நடத்தி வந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் கைது செய்யப்பட்டார்.
அவரை தொடர்ந்து, சி.ஆர்.பி.எப்., வீரர், அரசு ஊழியர் என பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக, 'ஜான் மஹால்' என்ற யு டியூப் சேனலை நடத்தி வந்த ஜஸ்பிர் சிங் என்பவர் பஞ்சாபில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை, 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சமூக ஊடகத்தில் பின்தொடர்கின்றனர். இவர், 2020 முதல் மூன்று முறை பாகிஸ்தான் சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜஸ்பிர் சிங், பாக்., ஐ.எஸ்.ஐ., அதிகாரி ஜட் ரந்தாவாவுடன் தொடர்பில் இருந்ததை உளவுத்துறை கண்டுபிடித்தது. மேலும், நம் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பாக்., துாதர் டேனிஷ் உடனும் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். டேனிஷின் அழைப்பின் படி பாக்., துாதரகத்தில் நடைபெற்ற பாக்., தேசிய தின நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். அவரது மொபைல் போனில் ஏராளமான பாகிஸ்தானியர்களின் எண்கள் இருந்துள்ளன.
ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்ட பின், பாக்.,கில் உள்ள தொடர்புகள் குறித்த தகவல்களை ஜஸ்பிர் சிங் அழிக்க முயன்றது தெரிய வந்துள்ளது. அவரை கைது செய்துள்ள போலீசார், மொபைல் போனை தடயவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும்
-
பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
மக்களே, உஷாரா இருங்க; நாடு முழுவதும் 5,364 பேருக்கு கொரோனா பாதிப்பு
-
பாகிஸ்தானில் ஏழ்மை நிலையில் 10 கோடி பேர்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு
-
டிரம்ப்- மஸ்க் மோதல் உச்சம்; டெஸ்லா நிறுவன பங்குகள் கடும் சரிவு