மாநில ஜூனியர் கூடைப்பந்து சென்னை மாவட்ட அணி வெற்றி

சென்னை, தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில், மாவட்டங்களுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி, காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடக்கிறது.
போட்டியில், 18 வயதுக்கு உட்பட்டோர் மட்டும் பங்கேற்கலாம். சென்னை, சேலம், நீலகிரி, தேனி, கரூர், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட, 38 அணிகள் இப்போட்டியில் பங்கேற்றள்ளன.
நாளை வரை ஆண்களுக்கும், 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை பெண்களுக்கும், இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.
நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான போட்டியில், திருப்பத்துார் மாவட்ட அணி, 59 - 54 என்ற புள்ளி கணக்கில் ராணிபேட்டையையும், சென்னை மாவட்ட 'ஏ' அணி, 93 - 62 என்ற புள்ளி கணக்கில் மதுரையையும் வீழத்தின.
அடுத்து நடந்த போட்டியில், துாத்துக்குடி மாவட்ட அணி, 76 - 47 என்ற புள்ளிக்கணக்கில் திருநெல்வேலியையும், திருவள்ளூர் மாவட்ட அணி, 89 - 39 என்ற புள்ளி கணக்கில் தேனியையும், சென்னை மாவட்ட 'பி' அணி, 74 - 46 என்ற புள்ளிக்கணக்கில் நாமக்கல் அணியையும் தோற்கடித்தன.
கோவை மாவட்ட 'ஏ' அணி, 80 - 56 என்ற புள்ளிக்கணக்கில் சேலத்தையும், திருச்சி மாவட்ட அணி, 39 - 38 என்ற புள்ளிக்கணக்கில் தஞ்சாவூர் அணியையும் தோற்கடித்தன.
மேலும்
-
மக்களே, உஷாரா இருங்க; நாடு முழுவதும் 5,364 பேருக்கு கொரோனா பாதிப்பு
-
பாகிஸ்தானில் ஏழ்மை நிலையில் 10 கோடி பேர்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு: வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு
-
டிரம்ப்- மஸ்க் மோதல் உச்சம்; டெஸ்லா நிறுவன பங்குகள் கடும் சரிவு
-
காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ., ரெய்டு; துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்
-
தருமபுரியில் மலையாள நடிகரின் கார் விபத்து; தந்தை பரிதாப பலி