நலவாரிய உறுப்பினராக முகாம் ஆதரவற்ற பெண்களுக்கு அழைப்பு
சென்னை, சென்னை மாவட்டத்தில் உள்ள விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் ஆகியோருக்கான நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம், 12ம் தேதி நடக்கிறது.
சென்னை கலெக்டர் அலுவலகத்தில், காலை 11:00 மணிக்கு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டை, ஆதார் நகல், மொபைல் போன் எண்ணை, www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிந்து, உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.
உறுப்பினராகும் பயனாளிகளுக்கு, பல்வேறு திறன் பயிற்சி, சுயதொழில் திட்டங்களில், மானியத்துடன் கூடிய கடனுதவிகள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட, நலிவுற்ற, ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் ஆகியோர், இம்முகாமில் பங்கேற்று உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராஜ்யசபா தேர்தல்; முதல்வர் முன்னிலையில் கமல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
-
நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி பெருமிதம்
-
பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி: நயினார் நாகேந்திரன் பேட்டி
-
மக்களே, உஷாரா இருங்க; நாடு முழுவதும் 5,364 பேருக்கு கொரோனா பாதிப்பு
-
பாகிஸ்தானில் ஏழ்மை நிலையில் 10 கோடி பேர்
Advertisement
Advertisement