திருச்சுழி அருகே ரோடு பணிகள் ஆய்வு

திருச்சுழி: திருச்சுழி அருகே ரோடு விரிவாக்க பணிகளை நெடுஞ்சாலை துறை ஆராய்ச்சி இயக்குனர் ஆய்வு செய்தார்.

திருச்சுழி அருகே கமுதி விலக்கு முதல் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. நெடுஞ்சாலை துறை சார்பில் 36.40 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை வாலிநோக்கம் மாநில நெடுஞ்சாலையில் கமுதி விலக்கு முதல் செட்டிகுளம் விலக்கு வரை 6 கி.மீ., ரோட்டில், இரு வழி பாதையாக இருந்தது. நான்கு வழி பாதையாக அகலப்படுத்தும் பணி மார்ச் 30ல் துவங்கப்பட்டது. 25 சதவீத பணிகள் முடிந்தன. நெடுஞ்சாலை துறை இயக்குனர் சரவணன் சாலை பணிகளின் அளவுகள், தரம் குறித்து ஆய்வு செய்தார். துணை இயக்குனர் இளங்கோ, கோட்ட பொறியாளர் திருவேங்கடம் ராமலிங்கம் (தர கட்டுப்பாடு) விருதுநகர் கோட்ட பொறியாளர் பாக்கியலட்சுமி பங்கேற்றனர்.

Advertisement