பாண்டியன் நகரில் சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஊராட்சி பாண்டியன் நகரில் சேதமடைந்த நிலையில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி உள்ளது. 2011ல் கட்டப்பட்ட 2 லட்சம் லி., மேல்நிலை நீர்த் தொட்டியின் தாங்கும் திறன் கொண்ட நான்கு அடி பகுதி துாண்களிலும் சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது.
பாண்டியன் நகர் பகுதி மக்கள் கூறியதாவது:
சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகே கலையரங்கம், விநாயகர் கோயில் மற்றும் பயணியர் நிழற்குடை உள்ளன. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் நான்கு தாங்கும் திறன் கொண்ட துாண்கள் சேதமடைந்துள்ளதால் விபத்து அபாயம் நிலவுகிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாற்று ஏற்பாடாக புதிய மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி ரெகுநாதபுரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டுள்ளது.
எனவே விபத்திற்கு வழியாகும் நிலையில் உள்ள பாண்டியன் நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த திருப்புல்லாணி யூனியன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும்
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்
-
ராஜ்யசபா தேர்தல்; முதல்வர் முன்னிலையில் கமல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
-
நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி பெருமிதம்
-
பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி: நயினார் நாகேந்திரன் பேட்டி