30 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்
ஓசூர், ஓசூரிலுள்ள மேற்கு மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில், மாற்று கட்சியினர் இணையும் விழா நடந்தது.
சூளகிரி, பா.ஜ., மத்திய ஒன்றிய முன்னாள் தலைவர் லட்சுமிபதி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் ராஜீ, துணைத்தலைவர் திருப்பதி, பொருளாதார பிரிவு சூளகிரி ஒன்றிய செயலாளர் ரகு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் நரேஷ் உட்பட, 20க்கும் மேற்பட்டோர், பிரகாஷ் எம்.எல்.ஏ., முன்னிலையில், தி.மு.க.,வில் தங்களை இணைத்து கொண்டனர். அவர்களுக்கு கட்சியின் சால்வை அணிவித்து எம்.எல்.ஏ., பிரகாஷ் வரவேற்றார்.
அதேபோல், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி தெற்கு ஒன்றிய, தி.மு.க., சார்பில், பேரிகையில் நடந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில், பா.ஜ., முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் சந்தோஷ்பாபு தலைமையில், 10க்கும் மேற்பட்டோர், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் முன்னிலையில் தங்களை, தி.மு.க.,வில் இணைத்து கொண்டனர்.
இளைஞரணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் நாகேஷ், பாக்கியராஜ், கருணாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்
-
ராஜ்யசபா தேர்தல்; முதல்வர் முன்னிலையில் கமல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
-
நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி பெருமிதம்
-
பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி: நயினார் நாகேந்திரன் பேட்டி