பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் 'ஸ்லீப்பர்' பெட்டி குறைப்பு உத்தரவு ரத்து
ராஜபாளையம்:பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சாதாரண படுக்கை வசதி பெட்டிகளை குறைத்து ஏசி பெட்டிகளாக மாற்றும் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை- - செங்கோட்டை இடையே பொதிகை எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் வழியாக சென்று வருகிறது. மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த ரயிலில் முன்பதிவு தொடங்கிய வேகத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு சென்று விடும்.
முதல் வகுப்பு ஏசி பெட்டி 1, இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி 2, மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள் 5, சாதாரண படுக்கை முன்பதிவு பெட்டிகள் 8, முன்பதிவு இல்லாத பெட்டிகள் 4 என மொத்தம் 22 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆக.2 முதல் பொதிகை ரயிலில் சாதாரண படுக்கை பெட்டி எண்ணிக்கையில் ஒன்றை குறைத்து ஏசி பெட்டி ஒன்றை அதிகரிக்க உத்தரவிடப்பட்டது. சாதாரண பெட்டிகள் குறைப்பால் நடுத்தர பயணிகள் பாதிக்கப்படுவர் என கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதையடுத்து பெட்டிகள் மாற்றும் உத்தரவு ரத்து செய்யப்பட்டு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வழக்கமான பெட்டிகளுடன் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மேலும்
-
இளைஞர்கள் அதிகாரம் பெற்றுள்ளனர்: மத்திய அரசு திட்டங்களை பட்டியல் போட்டு அண்ணாமலை பெருமிதம்
-
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி: கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்
-
பாகிஸ்தான் மனிதகுலத்திற்கு எதிரானது: காஷ்மீரில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி; நல்ல செய்தி வரும் என்கிறார் ஜி.கே.மணி!
-
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி
-
3 வயது சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை