ஐ.நா., பொருளாதார கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு

புதுடில்லி: ஐ.நா., பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வாகியுள்ளது.
சர்வதேச பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகள் தொடர்பான கொள்கைகளை பரிந்துரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அமைப்பாக ஐ.நா., பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் திகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில், 2026-28ம் ஆண்டுக்கான ஐ.நா., பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2026ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு பதவி காலம் இருக்கும். கடைசியாக 2008 முதல் 2020 வரை 4 முறை இந்த கவுன்சிலில் இந்தியா இடம்பெற்றது. தற்போது 18வது முறையாக இந்த கவுன்சிலின் உறுப்பினராக இந்தியா தேர்வாகியுள்ளது.
தங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சி பணிகளை முன்னெடுப்பதுடன், ஐ.நா., பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலை பலப்படுத்தும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும் என்று அவர் உறுதியளித்தார்.



மேலும்
-
ஜி7 மாநாடு; பிரதமர் மோடியை அழைத்தார் கனடா பிரதமர்
-
நடுவானில் பறந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்; திடீரென தரை இறங்கியதால் பரபரப்பு
-
மருதமலை முருகன் கோவிலுக்கு வாகனங்களில் செல்ல கட்டுப்பாடு: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
-
செயற்கைக்கோள் வழி இணைய சேவை: எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு லைசென்ஸ்
-
தென் மாநிலங்களின் ஜனநாயக வலிமை குறையும்: முதல்வர் ஸ்டாலின்
-
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி