நடுவானில் பறந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்; திடீரென தரை இறங்கியதால் பரபரப்பு

சஹரன்பூர்: இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் பயிற்சியின் போது அவசர, அவசரமாக தரையிறக்கப்பட்டது.
உ.பி.மாநிலம் சஹரன்பூர் அருகே இந்திய விமானப்படைக்குச் சொந்தமான அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது திடீரென ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதை கண்டு உடனடியாக சுதாரித்துக் கொண்ட 2 விமானிகள், சஹரன்பூர் விமான தளத்துக்கு பாதுகாப்பாக ஓட்டிச் சென்று அவசர, அவசரமாக தரையிறக்கினர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அப்பாச்சி ரக ஹெலிகாப்டர் அவரசமாக தரையிறக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பதை விமானப்படை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க மறுத்துவிட்டனர். இருப்பினும்,இது குறித்து விசாரணை தொடங்கி உள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள அணைப்பகுதியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது, நினைவிருக்கலாம்.

மேலும்
-
சித்தராமையா, டி.கே. சிவகுமார் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
-
வர்த்தக பதட்டம்: அமெரிக்காவும் சீனாவும் ஜூன் 9ம் தேதி பேச்சுவார்த்தை; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; ஈமு பார்ம்ஸ் இயக்குநருக்கு 10 ஆண்டு சிறை
-
நார்வே செஸ் போட்டியில் 7வது முறை பட்டம் வென்றார் கார்ல்சன்; 3வது இடத்தை பிடித்தார் குகேஷ்!
-
பொது இடங்களில் சிலைகள் நிறுவ அனுமதி வழங்கக்கூடாது; உயர்நீதிமன்றம் உத்தரவு
-
அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கில் இயக்குனர்கள் கைது