மருதமலை முருகன் கோவிலுக்கு வாகனங்களில் செல்ல கட்டுப்பாடு: கோவில் நிர்வாகம் அறிவிப்பு

கோவை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு கோவை மருதமலை கோவிலுக்கு வரும் 9 ம் தேதி டூவிலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவிலில் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் வரும் 9ம் தேதி வைகாசி விசாகத்தினை முன்னிட்டு மலைக்கோவிலுக்கு டூவிலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. பக்தர்கள் மலைப்படி வழியாகவும், திருக்கோவிலின் பஸ் மற்றும் கோவில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பஸ்களில் சென்று தரிசனம் செய்யலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மேலும்
-
சித்தராமையா, டி.கே. சிவகுமார் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
-
வர்த்தக பதட்டம்: அமெரிக்காவும் சீனாவும் ஜூன் 9ம் தேதி பேச்சுவார்த்தை; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
-
ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; ஈமு பார்ம்ஸ் இயக்குநருக்கு 10 ஆண்டு சிறை
-
நார்வே செஸ் போட்டியில் 7வது முறை பட்டம் வென்றார் கார்ல்சன்; 3வது இடத்தை பிடித்தார் குகேஷ்!
-
பொது இடங்களில் சிலைகள் நிறுவ அனுமதி வழங்கக்கூடாது; உயர்நீதிமன்றம் உத்தரவு
-
அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கில் இயக்குனர்கள் கைது