பெங்களூரு சம்பவத்தில் அரசியல் செய்யாதீங்க; கதறி அழுத படி கர்நாடக துணை முதல்வர் பேட்டி

பெங்களூரு: பெங்களூருவில் நடந்த துயர சம்பவத்தில் யாரும் அரசியல் செய்ய கூடாது என நிருபர்கள் சந்திப்பில் கதறி அழுத படியே கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வேண்டுகோள் விடுத்தார்.
பெங்களூருவில் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: நான் கர்நாடக மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். யாருக்கும் இந்ந நிலைமை வரக் கூடாது. இறந்தவர்களை நினைத்து துக்கம் தாங்க முடியவல்லை. இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது.
நாங்கள் நிர்வாகம் குறித்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வளவு கூட்டம் சேரும் என்று எதிர்பார்க்கவில்லை. பிணங்களை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு பதில் கூற விரும்பவில்லை. எதிர்க்கட்சிகள் இறந்த உடல்களை வைத்து அரசியல் செய்யட்டும். கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளைப் பார்ப்பது வேதனை அளிக்கிறது. அவர்களின் வலியை நான் புரிந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.








மேலும்
-
ஜி7 மாநாடு; பிரதமர் மோடியை அழைத்தார் கனடா பிரதமர்
-
நடுவானில் பறந்த அப்பாச்சி ஹெலிகாப்டர்; திடீரென தரை இறங்கியதால் பரபரப்பு
-
மருதமலை முருகன் கோவிலுக்கு வாகனங்களில் செல்ல கட்டுப்பாடு: கோவில் நிர்வாகம் அறிவிப்பு
-
செயற்கைக்கோள் வழி இணைய சேவை: எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு லைசென்ஸ்
-
தென் மாநிலங்களின் ஜனநாயக வலிமை குறையும்: முதல்வர் ஸ்டாலின்
-
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி