வில்வித்தை: இந்தியா ஏமாற்றம்

அன்டல்யா: துருக்கியில் உலக கோப்பை வில்வித்தை ('ஸ்டேஜ் 3') நடக்கிறது. காம்பவுண்டு அணிகளுக்கான போட்டி நடந்தது. ஜோதி, சிகிதா, மதுரா இடம் பெற்ற இந்திய அணி, அரையிறுதியில் வலிமையான தென் கொரியாவை சந்தித்தது. இதில் இந்தியா 234-242 என தோல்வியடைந்தது.
அடுத்து நடந்த வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா, அமெரிக்கா மோதின. 3 செட் முடிவில் ஸ்கோர் 179-179 என சமனில் இருந்தது. கடைசி செட்டில் இந்தியா 59-60 என ஏமாற்றியது. முடிவில் இந்திய அணி 238-239 என்ற கணக்கில் வீழ்ந்தது.
ரிஷாப், அபிஷேக், ஓஜாஸ் அடங்கிய இந்திய ஆண்கள் அணி, முதல் சுற்றில் 241-242 என சீன தைபே அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அகம் நெகிழ... மனம் மகிழ!
-
நினைவு கோப்பையில் அன்பின் ரசம் காலம் கடந்தாலும் பருக பரவசம்!
-
கைக்கூ! பறவையின் பாச க(வி)தை!
-
புறா சிறகு விரிக்கும் நம் மனம்
-
சித்தராமையா, டி.கே. சிவகுமார் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்
-
வர்த்தக பதட்டம்: அமெரிக்காவும் சீனாவும் ஜூன் 9ம் தேதி பேச்சுவார்த்தை; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!
Advertisement
Advertisement