வர்த்தக பதட்டம்: அமெரிக்காவும் சீனாவும் ஜூன் 9ம் தேதி பேச்சுவார்த்தை; அறிவித்தார் அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்காவும், சீனாவும் ஜூன் 9ம் தேதி வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை நடத்தும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்து உள்ளார்.
அமெரிக்கா பொருட்களுக்கு சீனா அதிக வரி விதித்து வருகிறது என அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். இதனையடுத்து சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க துவங்கினார். இதற்கு பதிலடியாக சீனாவும் வரி விதிக்க, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் துவங்கியது.
ஒரு கட்டத்தில் சீன பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவீதம் வரி விதித்தது. இரு நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தன. மேலும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்னர், வர்த்தக ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டது என அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது அமைச்சரவையின் பிரதிநிதிகள் ஜூன் 9ம் தேதி லண்டனில் சீன அமைச்சரவையை சந்தித்து வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பார்கள் என்று தெரிவித்தார். இது குறித்து சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி, தூதர் ஜேமிசன் கிரீர் ஆகியோர் ஜூன் 9ம் தேதி லண்டனில் சீன பிரதிநிதிகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தக் கூட்டம் மிக சிறப்பாக நடக்க வேண்டும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.


மேலும்
-
ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: உக்ரைனில் 3 பேர் பலி
-
சாலையோர தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி; சேலத்தில் சோகம்
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 56 பேர் பலி; தாய்லாந்து பிணைக்கைதி உடல் மீட்பு
-
போதிய பஸ் வசதி இல்லாமல் பொது மக்கள் அவதி: திமுக அரசு மீது இ.பி.எஸ்., சாடல்
-
பேரிடரை எதிர்கொள்ள உலகளாவிய டிஜிட்டல் களஞ்சியம் அவசியம்; பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
இந்தியாவில் தீவிர வறுமை குறைந்தது: உலக வங்கி அறிக்கை