பாட்மின்டன்: சிந்து ஏமாற்றம்

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் 17வது இடத்திலுள்ள இந்தியாவின் சிந்து, 8வது இடத்திலுள்ள தாய்லாந்தின் பார்ன்பாவீயை சந்தித்தார்.
முதல் செட்டை 22-20 என வென்ற சிந்து, அடுத்த செட்டை 10-21 என இழந்தார். 3வது செட்டில் சிந்து 15-11 என முன்னிலையில் இருந்தார். ஒரு கட்டத்தில் ஸ்கோர் 18-18 என சமனில் இருந்தது.
பின் சிந்து 18-21 என நழுவவிட்டார். ஒரு மணி நேரம், 18 நிமிடம் நடந்த போராட்டத்தின் முடிவில் சிந்து 22-20, 10-21, 18-21 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தார்.
ஆண்கள் அபாரம்
ஆண்கள் இரட்டையர் இரண்டாவது சுற்றில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, டென்மார்க்கின் ராஸ்மஸ், பிடரெரிக் ஜோடியை எதிர்கொண்டது. இந்திய ஜோடி 16-21, 21-18, 22-20 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.
மேலும்
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.71,840!
-
சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை
-
சர்வதேச சந்தையில் வலிமை பெறலாம்; ரெப்போ ரேட் குறைப்புக்கு வரவேற்பு
-
ஆன்லைன் வாயிலாக ரூ. 73.27 லட்சம் மோசடி: திருச்சூரை சேர்ந்த வாலிபர் கைது
-
காங்கிரஸ் மூத்த தலைவர் பாலகிருஷ்ண பிள்ளை மரணம்
-
திருப்பூர் மாவட்டத்தில் 5 மாதத்தில் 40 குழந்தை திருமணங்கள்