ஆன்லைன் வாயிலாக ரூ. 73.27 லட்சம் மோசடி: திருச்சூரை சேர்ந்த வாலிபர் கைது

பாலக்காடு; வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் வாயிலாக பணம் சம்பாதிக்கலாம் என, நம்ப வைத்து ரூ. 73.27 லட்சத்தை மோசடி செய்த வழக்கில், திருச்சூர் வாலிபரை, சைபர் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு ஒற்றைப்பாலத்தைச்சேர்ந்தவர், ஆன்லைன் வாயிலாக 'ஷேர் டிரேடிங்' செய்து பணம் சம்பாதிக்கலாம் என கூறி ஏமாற்றி, 73.27 லட்சம் ரூபாய் பணம் பறித்து விட்டனர் என, பாலக்காடு சைபர் குற்றப் பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், மாவட்ட எஸ்.பி., அஜித்குமாரின் அறிவுரையின்படி டி.எஸ்.பி., பிரசாதின் மேற்பார்வையில், சைபர் குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் நடத்திய விசாரணையில், திருச்சூர் மாவட்டம் குண்டுக்காடு குறிச்சிக்கரை பகுதியை சேர்ந்த அச்சு 29, என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
இன்ஸ்பெக்டர் சசிகுமார் கூறியதாவது:
இந்த மோசடி சம்பவம் 2024 டிச., மாதம் நடந்துள்ளது. டெலிகிராம் வழியாக புகார்தாரரை தொடர்பு கொண்டு, வீட்டிலிருந்தபடியே 'ஷேர் டிரேடிங்' செய்து பணம் அதிகமாக சம்பாதிக்கலாம் என வாக்குறுதி அளித்து, அவ்வப்போது டெபாசிட் தொகையாக ரூ.73.27 லட்சம் வாங்கப்பட்டது.
மோசடி நபர் அச்சு, ஏமாற்றியுள்ளதும், மோசடிக்காக மட்டுமே பயன்படுத்தும் வங்கிக் கணக்கில் கொள்முதல் செய்த பணத்திலிருந்து, பெரியதொரு தொகை அவரது வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளதும் விசாரணையில் தெரிந்தது.
கைது செய்த அச்சுவை, நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும்
-
சாலையோர தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி; சேலத்தில் சோகம்
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 56 பேர் பலி; தாய்லாந்து பிணைக்கைதி உடல் மீட்பு
-
போதிய பஸ் வசதி இல்லாமல் பொது மக்கள் அவதி: திமுக அரசு மீது இ.பி.எஸ்., சாடல்
-
பேரிடரை எதிர்கொள்ள உலகளாவிய டிஜிட்டல் களஞ்சியம் அவசியம்; பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
இந்தியாவில் தீவிர வறுமை குறைந்தது: உலக வங்கி அறிக்கை
-
தனியார் மயமாக்கல்: காங்., தலைவர் குற்றச்சாட்டை நிராகரித்தார் சுற்றுச்சூழல் அமைச்சர்