பைனலில் சபலென்கா-கோகோ காப்: பிரெஞ்ச் ஓபனில் மோதல்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பைனலுக்கு சபலென்கா, கோகோ காப் முன்னேறினர்.
பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் பெலாரசின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் மோதினர். 'டை பிரேக்கர்' வரை நீடித்த முதல் செட்டை சபலென்கா 7-6 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட ஸ்வியாடெக், 2வது செட்டை 6-4 என தன்வசப்படுத்தினார். 3வது செட்டில் சுதாரித்துக் கொண்ட சபலென்கா 6-0 என வென்றார். முடிவில் சபலென்கா 7-6, 4-6, 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக பைனலுக்குள் நுழைந்தார்.
மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் கோகோ காப், பிரான்சின் லோயிஸ் போய்சன் மோதினர். அபாரமாக ஆடிய கோகோ காப் 6-1, 6-2 என வெற்றி பெற்று, இத்தொடரில் 2வது முறையாக (2022, 2025) பைனலுக்கு முன்னேறினார்.
ஜோகோவிச் வெற்றி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மோதினர். இதில் ஜோகோவிச் 4-6, 6-3, 6-2, 6-4 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் அரையிறுதியில் ஜோகோவிச், இத்தாலியின் ஜானிக் சின்னர் மோதுகின்றனர். மற்றொரு அரையிறுதியில் ஸ்பெயினின் அல்காரஸ், இத்தாலியின் முசெட்டியை சந்திக்கிறார்.
கலப்பு இரட்டையர் பைனலில் இத்தாலியின் சாரா இரானி, ஆன்ட்ரியா வவாசோரி ஜோடி 6-4, 6-2 என அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட், எவான் கிங் ஜோடியை வீழ்த்தி கோப்பை வென்றது.
மேலும்
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
-
பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு