சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்

சாண்டியாகோ: சிலி நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. ரிக்டரில் 6.6 ஆக நிலநடுடுக்கம் பதிவாகி உள்ளது.
சிலி மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் அண்மையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. இதில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து சேதமாகின. அப்போது இந்த நிலநடுக்கம் 7.4 ஆக பதிவானது. உடனடியாக சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
இந் நிலையில் தற்போது மீண்டும் சிலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் 6.6 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் அறிவித்துள்ளது. அடகாமா பாலைவன பகுதி அருகே இந்த நில நடுக்கம் பதிவானது.
நிலநடுக்கம் காரணமாக சிறிய அளவிலான கட்டடங்கள் குலுங்கின. சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. பீதி அடைந்த மக்கள் சாலைகளில் ஓடி தஞ்சம் அடைந்தனர். பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்புகள்,சேதங்கள் ஏற்பட்டதா என்ற உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.
மேலும்
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்: இந்தியாவுக்கு பிரிட்டன் ஆதரவு
-
நம்மாழ்வார் விருது: கவர்னர் ரவி அறிவிப்பு
-
தேர்தல் முடிவு விவகாரம்: தேர்தல் கமிஷன் விளக்கம்: ஏற்க ராகுல் மறுப்பு
-
ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: உக்ரைனில் 3 பேர் பலி
-
சாலையோர தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி; சேலத்தில் சோகம்
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 56 பேர் பலி; தாய்லாந்து பிணைக்கைதி உடல் மீட்பு