தாலுகா அலுவலக வளாகத்தில் காட்டுச் செடிகளால் சுகாதார சீர்கேடு

கோத்தகிரி; கோத்தகிரி தாலுகா அலுவலக வளாகத்தில், காட்டு செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

கோத்தகிரி தாலுகா அலுவலகத்திற்கு, ஏராளமான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். தாலுகா அலுவலக தரைத்தளத்தில், நீதிமன்றமும் இயங்கி வருகிறது.

இதனால், வருவாய்த்துறை மற்றும் நீதித்துறை தேவைகளுக்காக வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இங்குள்ள அலுவலக வளாகத்தை சுற்றிலும், புதர் மற்றும் காட்டு செடிகள் ஆக்கிரமித்து காட்சியளிக்கிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது, விஷ ஜந்துக்களின் அச்சமும் உள்ளது. இதனால், அலுவலக தேவைக்கு வருபவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, காட்டுச் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement