மணிமண்டப சுவரை இடித்த காட்டு யானை

ஆனைமலை; ஆனைமலை அருகே, மணிமண்டப சுற்றுச்சுவரை காட்டுயானை இடித்து தள்ளியது.
ஆனைமலை அருகே, ஆழியாறு - வால்பாறை ரோட்டில் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது உலா வருகின்றன.இந்நிலையில், நேற்று நள்ளிரவு, 1:00 மணிக்கு ஆழியாறு பகுதிக்கு வந்த, ஒற்றை யானை, கட்டி முடிக்கப்பட்ட மணி மண்டப சுற்றுச்சுவரை இடித்தது. மணிமண்டப வளாகத்தில் உள்ள மாமர கிளையை முறித்து, பழங்களை சாப்பிட்டது.
தொடர்ந்து, ஆழியாறு விருந்தினர் மாளிகை அருகே யானைகள் முகாமிட்டு உலா வருகிறது. இதனால், சுற்றுலா பயணியர் பாதுகாப்புடன், கவனமாக செல்ல வேண்டும், என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
-
பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.71,840!
Advertisement
Advertisement