ஜோதிநகரில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைப்பு
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி அருகே ஜோதிநகரில், உயரழுத்த மின்விநியோக பிரச்னையை நீக்கும் பொருட்டு, 7 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பொள்ளாச்சி கோட்டத்தில், வீடு, தொழிற்சாலைகள் என, மொத்தம், 1,59,732 மின் இணைப்புகள் உள்ளன. பெருகும் குடியிருப்பு வீடுகள், தொழிற்சாலைகளால் உயரழுத்த, குறைவழுத்த மாறுபாடுகளால், சீரான விநியோகம் தடைபடுகிறது.
இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஆங்காங்கே புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு, தடையின்றி மின்விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அவ்வகையில், ரங்கசமுத்திரம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட ஜோதிநகரில், உயரழுத்தம் காரணமாக, மின்தடை ஏற்பட்டு வந்தது. அதனை சீரமைக்கும் பொருட்டு, தற்போது, 7 லட்சம் ரூபாய் மதிப்பில், 63 கே.வி.ஏ., திறனுடைய புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து, இயக்கி வைக்கப்பட்டது.
இதில், அனைத்து மின்வாரிய பொறியாளர்களும் கலந்து கொண்டனர். இதன்வாயிலாக, எம்.ஜி.ஆர்., நகர் மற்றும் கரிகாலசோழன்வீதியை சேர்ந்த, 350 வீடுகளுக்கு தடையின்றி மின் சப்ளை இருக்கும், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.71,840!
-
சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை
-
சர்வதேச சந்தையில் வலிமை பெறலாம்; ரெப்போ ரேட் குறைப்புக்கு வரவேற்பு
-
ஆன்லைன் வாயிலாக ரூ. 73.27 லட்சம் மோசடி: திருச்சூரை சேர்ந்த வாலிபர் கைது
-
காங்கிரஸ் மூத்த தலைவர் பாலகிருஷ்ண பிள்ளை மரணம்