கண் ஆபரேஷனுக்கு கட்டணம் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு
- நமது நிருபர் -
திருப்பூர் மாவட்டம், உடுமலை, காந்தி நகர் 2வது காலனியை சேர்ந்தவர் ஆனந்தன்,67; இவர், கோவை, ஆர்.எஸ்.புரத்திலுள்ள, மணிபால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், குடும்பத்தினருக்கு மருத்துவ காப்பீடு செய்திருந்தார்.
இந்நிலையில், அவரது சகோதரிக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டதால், தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கான சிகிச்சை கட்டணம் 60ஆயிரம்ரூபாய் வழங்க கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு விண்ணப்பித்தார். பணம் வழங்க காலதாமதம் செய்தனர்.
இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் பிறப்பித்த உத்தரவில், 'இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடுசெய்துள்ளதால், சிகிச்சை கட்டணம், 60ஆயிரம்ரூபாய் வழங்க வேண்டும். மனஉளைச்சலுக்கு இழப்பீடாக,10ஆயிரம்ரூபாய், வழக்கு செலவு, ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும்
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
-
பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு