மணல் கடத்தலில் ஈடுபட்ட டாரஸ் லாரி பறிமுதல்



குளித்தலை, குளித்தலை எஸ்.ஐ., நந்தகோபால் மற்றும் போலீசார், பெரிய பாலத்தில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், அரசு அனுமதியின்றி ஐந்து யூனிட் மணல் கடத்தியது தெரிய வந்தது. பின்னர் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பினார். மணல் லாரி பறிமுதல் செய்யப்பட்டு, போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.கரூரை சேர்ந்த லாரி உரிமையாளர் ராஜசுதாகர், 41, டிரைவர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement