கடன் வாங்கியவர் ஏமாற்றியதால் கணவன் தற்கொலை: உயிர் தப்பிய மனைவி

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, கடன் வாங்கியவர் பணத்தை தராமல் ஏமாற்றியதால் மனமுடைந்து துாக்கு மாட்டிய கணவன் தற்கொலை செய்து கொண்டார். கயிறு அறுந்ததால் மனைவி உயிர் தப்பினார்.

இது குறித்து, பள்ளிப்பாளையம் போலீசார் கூறியதாவது;

பள்ளிப்பாளையம் அருகே, காந்திபுரம் மூன்றாவது வீதியை சேர்ந்த சீனிவாசன், 54, விசைத்தறி தொழிலாளி, இவரது மனைவி காஞ்சனா, 50. தனக்கு தெரிந்த ஒருவரிடம், காஞ்சனா 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, தனது தோழிக்கு கொடுத்துள்ளார். கடன் கொடுத்தவர் காஞ்சனாவிடம் பணம் கேட்டுள்ளார். காஞ்சனா தனது தோழியிடம் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். ஆனால் தோழி பணம் தராமல் இழுத்தடித்துள்ளார். கடன் கொடுத்தவர் தொடர்ந்து காஞ்சனாவிடம் பணத்தை கேட்டு வந்துள்ளார்.
இதனால் காஞ்சனா, இவரது கணவர் சீனிவாசன் இடையே தகராறு வந்துள்ளது. பணத்தை வாங்கி கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றிய தோழி, கடன் கொடுத்தவர் பணத்தை கேட்டு நெருக்கடி ஆகியவற்றால் மனமுடைந்து காணப்பட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் காஞ்சனா, இவரது கணவர் சீனிவாசன் இருவரும் வீட்டில் கயிற்றால் துாக்குமாட்டி கொண்டனர். இதில் காஞ்சனா மாட்டிய கயிறு அறுந்ததால், அவர் கீழே விழந்தார். சீனிவாசன் இறந்து விட்டார். பின்னர் காஞ்சனா கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் சீனிவாசனின் இறந்த உடலை மீட்டனர்.
இவ்வாறு கூறினர்.

Advertisement