நாமக்கல்லுக்கு வரத்தான 2,500 டன் கடுகு புண்ணாக்கு
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழித்
தீவன ஆலைகளுக்கு, மத்திய பிரதேசத்தில் இருந்து, 2,500 டன் கடுகு புண்ணாக்கு சரக்கு ரயிலில் வரத்தானது.நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான கோதுமை, சர்க்கரை, அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களும், அதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மக்காச்சோளம், தவுடு, கடுகு புண்ணாக்கு, சோயா உள்ளிட்ட மூலப்பொருட்கள் பெரும்பாலும் வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயில்களில் வருவதுண்டு.
அந்த வகையில் கோழிப்பண்ணை, கோழித்தீவன அரவை ஆலைகளின் தேவைக்காக மத்திய பிரதேச மாநிலம், மொரேனாவில் இருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில், 2,500 டன் கடுகு புண்ணாக்கு நாமக்கல் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரத்தானது.
100க்கும் மேற்பட்ட லாரிகளில் அவற்றை ஏற்றி, பல்வேறு பகுதிகளில் செயல்படும் தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.
மேலும்
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
-
பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு