சிறப்பு கிராம சபை கூட்டம்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றித்தில் நேற்று, உலக சுற்றுச்சூழல் தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், தமிழக முதல்வரின் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தில், 38 ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, சிறப்பு கிராம சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, இன்று நிர்வாக அனுமதியும், வரும் 9ம் தேதி பணி உத்தரவு வழங்கி, 10ம் தேதி பணி துவங்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேல்நல்லாத்துார் பகுதியில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டம், ஊராட்சி செயலர் வாசுதேவன் முன்னிலையில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகனாம்பாள், பணி மேற்பார்வையாளர் சரளா ஆகியோர் தலைமையில் நடந்தது.

Advertisement