வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் தேரோட்டம்

விருதுநகர்: விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் திருவிழா மே 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் நகர்வலம் வருதல் நடந்தது.

மேலும் ஜூன் 3ல் நடந்த பொங்கல் திருவிழாவில் பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி நகர்வலம் வந்து கோவில் திடலில் மண்டபத்தில் எழுந்தருளினார்.

நேற்று முன்தினம் காலை முதல் பக்தர்கள் கயிறுகுத்து, அக்னிசட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், உருமாறி பல வேடங்கள் அணிந்து வருதல் உள்ளிட்ட நேர்த்திகடன்களை அம்மனுக்கு செலுத்தினர்.

நேற்று மாலை 4:36 மணிக்கு தேரோட்டம் துவங்கி நடந்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். ஏற்பாடுகளை விருதுநகர் ஹிந்து நாடார்கள் தேவஸ்தானம் செய்தனர்.

Advertisement