பெண் தலையாரியிடம் நகை பறிப்பு: வாலிபர் கைது

சாத்துார்: ஸ்ரீ ரெங்கபுரத்தை சேர்ந்தவர் ராஜ செல்வி,40. என். மேட்டுப் பட்டியில் தலையாரியாக பணி புரிந்து வருகிறார். நேற்று மாலை 4:00 மணிக்கு இருக்கன்குடி சாத்துார் ரோட்டில் ஆலம்பட்டி விலக்கு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த போது அவரை இருசக்கர வாகனத்தில் வந்து வழிமறித்த கோயில் புலிக்குத்தியை சேர்ந்த முனீஸ்வரன், 28. இரண்டு பவுன் செயினை பறித்து தப்பினார்.

அவர் கூச்சலிடவே அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் வாலிபரை மடக்கி பிடித்து நகையை பறிமுதல் செய்தனர். அம்மாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement