வீடு மறு கட்டமைப்புக்கு 17 பயனாளி தேர்வு
பனமரத்துப்பட்டி :பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், 20 ஊராட்சிகள் உள்ளன. அங்கு, முதல்வரின் வீடுகள் மறுகட்டமைப்பு திட்டத்தில், 2021ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பழைய தொகுப்பு வீடுகளை புதுப்பிக்க, 2.40 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. அத்திட்டத்தில், 17 பழைய வீடுகளை, பேஸ்மட்டம் வரை இடித்து அகற்றிவிட்டு, சுவர், மேற்கூரை புதிதாக அமைத்து தர, மாவட்ட நிர்வாகத்துக்கு, ஒன்றிய அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.
மேலும் இத்திட்டத்தில், மக்களிடம் இருந்து விண்ணப்பங்களை எதிர்பார்த்து, 20 ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டம் நேற்று நடந்தது. சந்தியூர் ஆட்டையாம்பட்டியில் பழைய வீடுகளை புதுப்பிக்கவும், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் புதிய வீடு கேட்டும் ஏராளமான மக்கள் மனு அளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
-
பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு
Advertisement
Advertisement