உலக சுற்றுச்சூழல் தின விழாவில் மாணவர்கள் மரக்கன்று நட்டனர்

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஆர்.கண்ணபுரத்தில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப் படை மாணவர்கள் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.

முதல்வர் பிரீத்தா தலைமை வகித்தார். துணை முதல்வர் முத்துக்கண்ணு முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாக ஆலோசகர் ஜேக்கப் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் சொப்னா நன்றி கூறினார். நுாறுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டு பள்ளி வளாகத்தில் நடும் நிகழ்ச்சி நடந்தது.

மரங்கள் வளர்ப்பதின் அவசியம், இயற்கை சார்ந்த பசுமையின் பங்களிப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

*ராமநாதபுரம் எம்.ஜி.பப்ளிக் பள்ளியில் உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு அனைவரும்பசுமை உறுதிமொழி எடுத்தனர். நெகிழி பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்போம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி, கட்டுரை போட்டிகள் நடந்தது.

மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலர் ரவி, பள்ளியின் முதல்வர் விஜயலெட்சுமி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

*ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் தலைமை ஆசிரியை பாக்கிய ரோசரி தலைமையில் நடைபெற்றது. பசுமை படை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் முன்னிலை வகித்தார்.

ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவர்கள் மரக்கன்று நடவு செய்தனர். தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும், மரம் நடுவதன் அவசியம் குறித்தும், ஆசிரியர்கள் மாணவர்களிடம் விளக்கினர். பின்னர், முக்கிய வீதிகள் வழியாக சுற்றுச்சூழலை வலியுறுத்தி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

* கமுதியில் பா.ஜ., சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட துணைத்தலைவர் கணபதி தலைமை வகித்தார். அப்போது கமுதி அரசு மருத்துவமனை, மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் சுத்தம் செய்யப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. பின் சுற்றுச்சூழல் தினம் உறுதிமொழி எடுத்தனர். உடன் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் வேலவன், மத்திய ஒன்றிய தலைவர் பூபதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement