தமிழகத்தில் ஜூன் 12ல் திறக்கப்படும் புதிய சுங்கச்சாவடி: கட்டண விவரங்கள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் புதிய சுங்கச்சாவடி வரும் 12ம் தேதி திறக்கப்படுகிறது.
இது குறித்த அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி தஞ்சை-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சேத்தியாதோப்பு-மானம்பாடி பகுதியில் இந்த புதிய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கான கட்டண விகிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கார், வேன் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.105 கட்டணம், அதேநாளில் திரும்பி வர ரூ.160 கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வியாபார ரீதியாக பொருட்களை ஏற்றிச் செல்லும் இலகுரக வாகனங்கள், மினி பஸ் போன்ற வாகனங்கள் ஒருமுறை பயணிக்க ரூ.170 கட்டணம், திரும்பி வர ரூ.255 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனியார் பஸ்களுக்கு ரூ.360, ரூ.540, அதிகபட்சமாக 7 அல்லது அதற்கு மேற்பட்ட சக்கரங்கள் கொண்ட கனரக வாகனங்களுக்கு ரூ.685, திரும்பி வர ரூ.1025 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




மேலும்
-
பயங்கரவாதிகளை வளர்க்கும் நாடு: பாக்., மீது அனுராக் தாக்கூர் எம்.பி.,குற்றச்சாட்டு
-
பணமில்லா பரிவர்த்தனை கண்டக்டர்களுக்கு பாராட்டு
-
கல்வி உபகரணம் வழங்கல்
-
பெங்களூரு கூட்ட நெரிசல் 11 பேர் பலி: நிவாரணம் ரூ.25 லட்சமாக அதிகரிப்பு
-
பயங்கரவாதிகளை வைத்து மோதலை விரும்பும் பாகிஸ்தான்; ரவி சங்கர் பிரசாத் குற்றச்சாட்டு
-
சோனியா திடீரென மருத்துவமனையில் அனுமதி