சிறுபாலையில் புள்ளிமான் பலி

இளையான்குடி: இளையான்குடி அருகே சிறுபாலையில் அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டு புள்ளிமான் பலியானது.

இளையான்குடி பெரிய கண்மாய் மற்றும் சுற்று வட்டாரப் காட்டுப் பகுதியில் புள்ளி மான்கள் வசித்து வருகின்றன. மான்கள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவதால் அவ்வப்போது நாய்களிடம் சிக்கியும்,வாகனங்களில் அடிபட்டும் பலியாகி வருகின்றன.நேற்று முன்தினம் இரவு இளையான்குடியில் இருந்து ஆர்.எஸ்.,மங்கலம் செல்லும் ரோட்டில் சிறுபாலை அருகே ரோட்டை கடக்க முயன்ற மான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலியானது.

Advertisement