விளாங்காட்டூரில் ஆக்கிரமிப்பு அகற்றம்

சிவகங்கை: காளையார்கோவில் அருகே விளாங்காட்டூரில் நாட்டார் கால் ஆற்றின் கரைகளை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை பொதுப்பணித்துறையினர் நேற்று அகற்றினர்.
காளையார்கோவில் ஒன்றியம் விளாங்காட்டூர் வழியாக பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள நாட்டார் கால் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் கரைகளை பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டியிருந்தனர். காலப்போக்கில் ஆற்றின் கரை முற்றிலும் சேதமானது.
இதையடுத்து நாட்டார் கால் ஆற்றின் கரையில் கட்டியுள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். நேற்று பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தலைமையில் உதவி பொறியாளர்கள் அமுதசுரபி, முத்துராமலிங்கம் ஆகியோர் நாட்டார் கால் ஆற்றின் கரையில் கட்டியிருந்த வீடுகளை இயந்திரம் மூலம் அகற்றினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழகத்தில் ஜூன் 12ல் திறக்கப்படும் புதிய சுங்கச்சாவடி: கட்டண விவரங்கள் வெளியீடு
-
5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம்; அரசு பொறுப்பேற்க அன்புமணி வலியுறுத்தல்
-
கோவை கல்குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு என்ன: விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
Advertisement
Advertisement