சிங்கம்புணரியில் திருக்கல்யாணம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5ம் நாளான நேற்று திருக்கல்யாணம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு பூரண, புஷ்கலா தேவி, சேவுகப்பெருமாள் ஐயனாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினர்.

அங்கு கிராமத்தார்கள் முன்னிலையில் இரவு 7:30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. கோயில் சிவாச்சாரியார்கள் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து ஊஞ்சலாட்டு நிகழ்ச்சி நடந்தது. இன்று கழுவன் திருவிழா நடக்கிறது. ஜூன் 9ஆம் தேதி தேரோட்டமும் 10ம் தேதி பூப்பல்லக்கு உற்ஸவமும் நடக்கிறது.

Advertisement