திருவள்ளூர் கலெக்டருக்கு பசுமை விருது வழங்கல்

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டருக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான பசுமை விருது வழங்கப்பட்டது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சிறந்த நடவடிக்கை எடுக்கும் மாவட்ட நிர்வாகத்தை ஊக்குவிக்க, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக பசுமை விருது வழங்கி வருகிறது.

அதன்படி, கடந்த 2023 - -24ம் ஆண்டில் தொழிற்சாலைகளில் மாசு கட்டுப்படுத்துதல், பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த விதிகளை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சார்ந்த நடவடிக்கை மேற்கொண்டதற்காக, திருவள்ளூர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டது.

இதையடுத்து, சென்னையில் நேற்று நடந்த உலக சுற்றுச்சூழல் தின விழாவில், முதல்வர் ஸ்டாலின், பசுமை விருதை, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப்பிற்கு வழங்கினார்.

Advertisement