டூவீலர்கள் மோதல் இருவர் பலி

இளையான்குடி,:சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள ஒச்சந்தட்டு கிராமத்தை சேர்ந்த கஸ்பார் மகன் அருள்சாமி 55. இவர் நேற்று டூவீலரில் அங்கிருந்து கோட்டையூர் செங்கல் சேம்பர் அருகே சென்று கொண்டிருந்தார்.


பின்னால் மற்றொரு டூவீலரில் வந்த இளையான்குடி அருகே உள்ள அ. நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் ஹரிஷ் 21, அருள்சாமி டூவீலர் மீது மோதியதில் அருள்சாமி பலியானார். ஹரிஷ் காயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் இறந்தார். இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement