மருத்துவ மூலப்பொருட்கள் ஏற்றி வந்த வேன் எரிந்தது

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே தேனி ரோட்டில், ஸ்ரீ ரங்காபுரம் விலக்கருகே தேனியிலிருந்து மருத்துவ மூலப்பொருட்கள் ஏற்றி வந்த மினி சரக்கு வேன் தீப்பிடித்து எரிந்தது.தேனி அல்லிநகரம் பகுதி தனியார் நிறுவனத்திலிருந்து மருந்து பொருட்கள் தயாரிக்க மூலப்பொருட்களை சரக்கு வேனில் ஏற்றிக் கொண்டு மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு தேனி மலைச்சாமியுடன் 35, டிரைவர் சகுபர்சாதிக் 50, ஓட்டி வந்தார்.
மலைக்கணவாய் பகுதியில் இருந்து இறங்கி ஸ்ரீரங்காபுரம் விலக்கருகே வந்த போது திடீரென வேன் தீப்பற்றியது. வேனில் இருந்து மருந்துப் பொருட்களை அப்புறப்படுத்துவதற்குள் தீ வேகமாக பரவியது. தகவலறிந்து வந்த உசிலம்பட்டி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் மருந்து பொருட்களும், வேனும் எரிந்தன. பேட்டரி மின் கசிவால் தீப்பிடித்ததா என போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம்; அரசு பொறுப்பேற்க அன்புமணி வலியுறுத்தல்
-
கோவை கல்குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு என்ன: விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி