கூட்டுறவு சங்கங்களில் உரம் இருப்பு வைக்க உத்தரவு தினமலர் செய்தி எதிரொலி
தேனி: தொடக்க வேளாண் கூட்டுறவுச்சங்கங்களில் தேவையான அளவு உரங்கள் கையிருப்பு வைக்க வேளாண் துறை உத்தரவிட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள சில தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் யூரியா உள்ளிட்ட உரங்கள் கையிருப்பு இன்றி உள்ளன. இதனால் விவசாயிகள் கூடுதல் விலைக்கு வாங்கும் நிலை தொடர்கிறது.
இது தொடர்பாக தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து வேளாண் துறை அதிகாரிகள் குறிப்பிட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் ஆய்வு செய்து, உரங்கள் போதிய அளவில் கையிருப்பு வைக்க அறிவுறுத்தினர். கையிருப்பு இல்லாத சங்கங்கள் உரங்கள் இறக்க டான்பெட் நிறுவனத்திற்கு கடிதம் எழுதி உள்ளனர்.
மேலும், ஜூன் 10க்குள் உரங்கள் கையிருப்பு இல்லாத சங்கங்களில் 350 டன் உர மூடைகள் இருப்பு வைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவை கல்குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு என்ன: விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
-
பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி
Advertisement
Advertisement