கம்பிகள் திருட்டு: ஒருவர் கைது

பெரியகுளம்: பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணி 27.

இவர் பில்டர்ஸ் நிறுவன மேலாளர். இவர்களுக்கு லட்சுமிபுரம் பகுதியில் குடோன் உள்ளது. இதில் தேனி அரண்மனைப்புதூர் முல்லை நகரைச் சேர்ந்த நாகேந்திரன் 29. ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு குழாய்களை திருடியுள்ளார்.

இதனை குடோனில் பணிபுரியும் மனோஜ், அரவிந்த் பார்த்து நாகேந்திரனை பிடித்தனர். தென்கரை எஸ்.ஐ., இதிரிஸ்கான் நாகேந்திரனை கைது செய்து, இரும்பு குழாய்களை கைப்பற்றினார்.--

Advertisement