உப்பார்பட்டி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க காங்., எதிர்ப்பு வர்த்தக காங்கிரஸ் எதிர்ப்பு
தேனி: தேனி - கம்பம் ரோட்டை நான்கு வழி சாலையாக மாற்றுவதற்கு முன் உப்பார்பட்டி சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதம்.''என தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் எதிர்ப்பு தெரிவித்து, கோவை மண்டல தேசிய நெடுஞ்சாலை தலைமை பொறியாளர், தேனி மண்டல செயற்பொறியாளர்,கலெக்டரிடம் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது: தேனி சின்னமனுார் ரோட்டில் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தேனி கம்பம் ரோடு இன்னும் நான்கு வழி சாலையாக மாற்றவில்லை.
அதற்குள் கட்டணம் வசூல் செய்வது சட்ட விரோதம். தேசிய நெடுஞ்சாலைத்துறையின் ஆணைய விதிமுறைகளில்நான்கு வழிச்சாலை அமைத்து முடித்த பின்பே அந்த சாலை போக்குவரத்த வழித்தடத்தில் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுளளது.
இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கலெக்டர், தேசிய நெடுங்சாலை பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்
-
தமிழகத்தில் ஜூன் 12ல் திறக்கப்படும் புதிய சுங்கச்சாவடி: கட்டண விவரங்கள் வெளியீடு
-
5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம்; அரசு பொறுப்பேற்க அன்புமணி வலியுறுத்தல்
-
கோவை கல்குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு என்ன: விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்