உப்பார்பட்டி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க காங்., எதிர்ப்பு வர்த்தக காங்கிரஸ் எதிர்ப்பு

தேனி: தேனி - கம்பம் ரோட்டை நான்கு வழி சாலையாக மாற்றுவதற்கு முன் உப்பார்பட்டி சுங்கச்சாவடியில் வாகன கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதம்.''என தேனி மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் எதிர்ப்பு தெரிவித்து, கோவை மண்டல தேசிய நெடுஞ்சாலை தலைமை பொறியாளர், தேனி மண்டல செயற்பொறியாளர்,கலெக்டரிடம் கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது: தேனி சின்னமனுார் ரோட்டில் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தேனி கம்பம் ரோடு இன்னும் நான்கு வழி சாலையாக மாற்றவில்லை.

அதற்குள் கட்டணம் வசூல் செய்வது சட்ட விரோதம். தேசிய நெடுஞ்சாலைத்துறையின் ஆணைய விதிமுறைகளில்நான்கு வழிச்சாலை அமைத்து முடித்த பின்பே அந்த சாலை போக்குவரத்த வழித்தடத்தில் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுளளது.

இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். கலெக்டர், தேசிய நெடுங்சாலை பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement