ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை
பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூரில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது.
ஐ.பி.எல்., கோப்பை வெற்றி விழாவை காண சின்னசாமி மைதானத்தின் முன் ஏராளமானோர் குவிந்த நிலையில், நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக அப்போது விவாதிக்கப்பட்டது. கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சித்த ராமையா கூறியதாவது:
கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவம் தொடர்பான விசாரணையை, கர்நாடகாவின் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையிலான ஒரு நபர் கமிஷனிடம் ஒப்படைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அது தொடர்பான அறிக்கையை அடுத்த 30 நாட்களுக்குள் வழங்குமாறு கமிஷனிடம் கூறிஉள்ளோம்.
இந்த விவகாரத்தில், ஆர்.சி.பி., அணி நிர்வாகிகள், நிகழ்ச்சி நடத்திய நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோரை கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
5 ஆண்டுகளில் ரூ.840 கோடி மதிப்புள்ள நெல் சேதம்; அரசு பொறுப்பேற்க அன்புமணி வலியுறுத்தல்
-
கோவை கல்குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு என்ன: விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு
-
விவசாயிகளுக்கு சேவை செய்வது பாக்கியம்: பிரதமர் மோடி பெருமிதம்!
-
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டடங்கள்: வீதிகள் மக்கள் ஓட்டம்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி