மக்கள் நீதிமன்றம் 14ல் கூடுகிறது

தேசிய மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின் பேரில், திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், வரும் 14ம் தேதி, லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றம் கூடுகிறது.

திருப்பூர் மாவட்ட கோர்ட் வளாகத்தில் எட்டு அமர்வு; உடுமலையில் நான்கு அமர்வு மற்றும் பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு அமர்வு என மொத்தம் 20 அமர்வுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படும். கோர்ட்களில் நீண்ட காலம் நிலுவையில் உள்ள, வாகன விபத்து இழப்பீடு வழக்குகள்; சிவில் வழக்குகள், செக் மோசடி வழக்குகள்; குடும்ப நல வழக்குகள், நில அபகரிப்பு அசல் வழக்குகள்; வங்கிவராக்கடன் வழக்குகள், சேவை தொடர்பான வழக்குகள், சமரசத்துக்குரிய சிறு குற்ற வழக்குகள், போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்து தீர்வு காணப்படும்.இதில் பங்கேற்று பயன் பெற விரும்புவோர், சட்டப் பணிகள் ஆணைக்குழுவை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement