பெரியகுளம் விவசாயிக்கு நீர்நிலை பாதுகாவலர் விருது முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திகேயனுக்கு மாவட்ட அளவில் நீர்நிலை பாதுகாவலர் விருதினை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திகேயன் 55. லட்சுமிபுரம் செங்குளம் கண்மாயில் கடந்தாண்டு ஆகாயத்தாமரை நிறைந்து குளம் மாசுபட்டது. செங்குளத்தை காப்பதற்கு விவசாயி கார்த்திகேயன் முயற்சியால் முந்தைய கலெக்டர் ஷஜீவனா,ஆர்.டி.ஓ.,முத்துமாதவன் மற்றும் லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து ஆகாயத்தாமரை அகற்றி, நீரை வெளியேற்றி 1 மீட்டர் ஆழத்திற்கு கண்மாய் தூர்வாரி கரையை பலப்படுத்தினர். செங்குளம் கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கார்த்திகேயன் முயற்சியால் ஊர் பொதுமக்கள் பங்களிப்போடு நமக்கு நாமே திட்டத்தில் மாவட்ட நிர்வாகத்திடம் ரூ.23.50 லட்சம் வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் ரூ.26 லட்சம் ஒதுக்கீடு செய்து ரூ.49.50 லட்சத்தில் கழிவுநீர் கண்மாயில் கலக்காமல் சாக்கடை கட்டப்பட்டது. இதனால் தற்போது மாசில்லா செங்குளமாக மாறி நன்னீர் குளமாக காட்சியளிக்கிறது.
சென்னையில் நடந்த உலக சுற்றுச்சூழல் விழாவில் முதல்வர் ஸ்டாலின் 2025 ம் ஆண்டிற்கான தேனி மாவட்ட நீர்நிலை பாதுகாவலர் விருது மற்றும் ரூ.1 லட்சத்தை கார்த்திகேயனிடம் வழங்கி கவுரவித்தார். கார்த்திகேயன் ரூ.1 லட்சத்தை சமூகப்பணி வளர்ச்சிக்கு லட்சுமிபுரம் கிராம கமிட்டி தலைவர் சிவசங்கரிடம் வழங்கினார்.
மேலும்
-
இனி 10 மணி நேரம் வேலை: ஆந்திர அரசு முடிவு
-
சத்தீஸ்கரில் நக்சலைட் 2 பேர் சுட்டுக்கொலை; 3 நாட்களில் 4 பேரை சுட்டு வீழ்த்தி பாதுகாப்பு படையினர் அதிரடி!
-
274 கிராம் சட்ட விரோதமாக தங்கம் வைத்திருந்த இந்தியர் நேபாளத்தில் கைது
-
தேர்தலில் 'மேட்ச் பிக்சிங்கா': ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்
-
அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்; உயிர்தப்பிய கேதர்நாத் பயணிகள்
-
10 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை; மனிதநேய டாக்டர் டி.கே.ரத்தினம் காலமானார்!