மின் மாற்றியில் காப்பர் கம்பி திருட்டு
விழுப்புரம்; விழுப்புரத்தில் மின் டிரான்ஸ்பார்மரில் உள்ள காப்பர் காயில் மற்றும் ஆயில் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம், ஜானகிபுரத்தில் உள்ள மின்வாரியம் இயக்குநர் பராமரிப்பு அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக வசந்தி கிருஷ்ணன், 33; பணிபுரிகிறார். இவர், நேற்று முன்தினம் அதே பகுதியில் புதிய மேம்பாலம் வளைவில் உள்ள மின் டிரான்ஸ்பார்மரை சோதனை செய்தார்.
அதில், 50 கிலோ காப்பர் காயில் மற்றும் 200 லிட்டர் ஆயில் திருடு போனது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.71,840!
-
சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை
-
சர்வதேச சந்தையில் வலிமை பெறலாம்; ரெப்போ ரேட் குறைப்புக்கு வரவேற்பு
-
ஆன்லைன் வாயிலாக ரூ. 73.27 லட்சம் மோசடி: திருச்சூரை சேர்ந்த வாலிபர் கைது
-
காங்கிரஸ் மூத்த தலைவர் பாலகிருஷ்ண பிள்ளை மரணம்
-
திருப்பூர் மாவட்டத்தில் 5 மாதத்தில் 40 குழந்தை திருமணங்கள்
Advertisement
Advertisement