3 மாதம் இலவச ரீசார்ஜ் போலி 'லிங்'; சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

புதுச்சேரி; மொபைல் நிறுவனங்கள் 3 மாதம் இலவசமாக ரீசார்ஜ் வழங்குவதாக வரும் போலி லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறியதாவது;
ஐ.பி.எல்., தொடரில் ஆர்.சி.பி., வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், மொபைல் நிறுவனங்கள் அனைத்து இந்தியர்களுக்கும் மூன்று மாதம் ரீசார்ஜை இலவசமாக வழங்குவதாகவும், கீழே கொடுக்கப்பட்ட லிங்கை கிளிக் செய்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இது, இணையவழி குற்றவாளிகள் பணத்தை பறிக்க உருவாக்கிய போலி லிங்க் ஆகும். அந்த லிங்கை யாரும் கிளிக் செய்ய வேண்டாம். தெரியாமல் யாராவது கிளிக் செய்து விட்டால், அதில் கேட்கும் கேள்விகளான மொபைல் எண், வங்கி கணக்கு எண், ஓ.டி.பி., போன்ற தகவல்களை கொடுக்க வேண்டாம்.
இதனால் உங்களுக்கு பணமிழப்பு அபாயம் ஏற்படலாம். எனவே சமூக வலைதளங்களில் வரும் செய்தியை உறுதிப்படுத்தாமல் நம்ப வேண்டாம். மேலும், இணைய வழி சம்மந்தமான புகார் தெரிவிக்க மற்றும் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள 1930, 0413-2276144, 9489205246 எண்களில் cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் சைபர் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளவும்.
மேலும்
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.71,840!
-
சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை
-
சர்வதேச சந்தையில் வலிமை பெறலாம்; ரெப்போ ரேட் குறைப்புக்கு வரவேற்பு
-
ஆன்லைன் வாயிலாக ரூ. 73.27 லட்சம் மோசடி: திருச்சூரை சேர்ந்த வாலிபர் கைது
-
காங்கிரஸ் மூத்த தலைவர் பாலகிருஷ்ண பிள்ளை மரணம்
-
திருப்பூர் மாவட்டத்தில் 5 மாதத்தில் 40 குழந்தை திருமணங்கள்