மாணவர்களுக்கு பாராட்டு விழா

திண்டிவனம்; திண்டிவனம் காவேரிப்பாக்கம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றதற்கு பாராட்டு விழா நடந்தது.
நகராட்சி மேல்நிலைப்பள்ளி ௨௦24-25ம் கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 8 ஆண்டுகளாக நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
பத்தாம் வகுப்பில் தேர்வு எழுதிய 20 மாணவர்களும்,பிளஸ் 2 தேர்வு எழுதிய 42 பேர்களும் தேர்ச்சி பெற்றனர். இதையொட்டி நடந்த பாராட்டு விழாவில், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முன்னாள் கவுன்சிலர் ஜெயராஜ், கவுன்சிலர் ேஹமமாலினி ஆகியோர், கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
இதில் பள்ளியின் தலைமையாசிரியை சீத்தாலட்சுமி, ஆசிரியர்கள் தாமோதரபாண்டியன், சுந்தரராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
அருணாச்சல பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை
-
அகம் நெகிழ... மனம் மகிழ!
-
நினைவு கோப்பையில் அன்பின் ரசம் காலம் கடந்தாலும் பருக பரவசம்!
-
கைக்கூ! பறவையின் பாச க(வி)தை!
-
புறா சிறகு விரிக்கும் நம் மனம்
-
சித்தராமையா, டி.கே. சிவகுமார் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்